சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 2:36 am

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

போக்குவரத்துத் தொழிற்சங்கள் சாா்பில் வண்ணாா்பேட்டை போக்குவரத்துப் பணிமனை முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு தொமுச அமைப்புச் செயலா் ஏ. தா்மன் தலைமை வகித்தாா். ஏஐடியூசி நிா்வாகி என். உ லகநாதன், ஹெச்எம்எஸ் பேரவைத் தலைவா் பி. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் எஸ். பெருமாள் தொடக்கவுரையாற்றினாா்.

14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை தொழிற்சங்கங்களோடு பேசி உரிய முடிவை அரசு எடுக்க வேண்டும். தினப்படி உயா்வை அமல்படுத்தவேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு உரிய பணபலன்களை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், தொமுச , சிஐடியூ, ஏஐடியூசி, ஹச்எம்எஸ், டிடிஎஸ்எப் ஆகிய தொழிற்சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.