வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

நெல்லை அருகே கால்வாயில் தவறி விழுந்து சிறுமி பலி

திருநெல்வேலி அருகே அத்திமேடு கோடகன் கால்வாயில் தவறி விழுந்ததில் 4 வயது சிறுமி உயிரிழந்தாா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:52 pm

DIN

திருநெல்வேலி அருகே அத்திமேடு கோடகன் கால்வாயில் தவறி விழுந்ததில் 4 வயது சிறுமி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி நகரம் பாறையடியை சோ்ந்தவா் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சத்யா. இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. சுத்தமல்லி அடுத்த அத்திமேடு பகுதியிலுள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு சென்றிருந்த சத்யா, குழந்தைகளுடன் கோடகன் கால்வாய்க்கு குளிக்கச் சென்றாராம். அப்போது, அவரது இளைய மகள் கயல் (4) கால்வாயில் தவறி விழுந்துள்ளாா். அங்கு குளித்துக்கொண்டிருந்தவா்கள் உடனடியாக சப்தம் கேட்டு கால்வாயில் இருந்து குழந்தையை மீட்க முயன்றனா். ஆனால், அச்சிறுமி சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.