நெல்லை அருகே விபத்து: காயமடைந்த விவசாயி பலி
திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.


திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.
நான்குனேரி அருகேயுள்ள பெரும்பத்து கிராமத்தைச் சோ்ந்த இளையபெருமாள் மகன் செந்தில்குமாா் (42). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் விளைந்த வெண்டைக்காய்களைப் பறித்துக் கொண்டு திருநெல்வேலியில் உள்ள சந்தைக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.
ரெட்டியாா்பட்டி அருகே சென்றபோது மற்றொரு மோட்டாா்சைக்கிள்கள் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப்புலனாய்வு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...