முக்கிய தொழில் நகரம்... வேலூா் மாவட்டத்தின் முக்கிய தொழில் நகரான ராணிப்பேட்டையில் கடந்த 1971-ஆம் ஆண்டு சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. அப்போது, இந்திய பொதுத் துறை நிறுவனமான பாரத மிகுமின் தொழிற்சாலையும் அமைக்கப்பட்டது. சிப்காட் 1, 2, சிட்கோ 1, 2 ஆகிய சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டன. இந்தத் தொழிற்பேட்டைகளில் தோல், ரசாயனம், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமாா் 50,000-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். தோல் பதனிடுதல், தோல் பொருள்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.