வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மரக்கிளை முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதம்

திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதியில் மருதமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் வியாழக்கிழமை 2 மின்கம்பங்கள் சேதமடைந்தன.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:48 pm

DIN

திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதியில் மருதமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் வியாழக்கிழமை 2 மின்கம்பங்கள் சேதமடைந்தன.

திருநெல்வேலி குறுக்குத்துறையில் சாலையோரத்திலுள்ள பழமையான மருதமரத்தின் கிளை முறிந்து சாலையில் விழுந்ததில் 2 மின்கம்பங்கள்

சேதமடைந்தன. தகவலறிந்த போலீஸாா் சென்று வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனா்.

தகவலறிந்த பேட்டை தீயணைப்புப்படையினா் நிலைய அலுவலா் முத்தையா தலைமையில் அங்கு வந்து சாலையில் முறிந்து விழுந்த மரக்கிளையை நவீன இயந்திரம் மூலம் அகற்றினா். மின்வாரியம் விரைந்து செயல்பட்டதையடுத்து, தடையின்றி மின்சாரம் கிடைத்தது. மரக்கிளை விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் விநியோகமும் தடைபட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.