வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

‘நெல்லை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க சிறப்பு தனிப்படைகள்’

திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களை தடுக்க 5 சிறப்பு தனிப்படைகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:42 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களை தடுக்க 5 சிறப்பு தனிப்படைகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சமீப காலமாக கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மேலும், முன்விரோதம் காரணமாகவும் குற்றங்கள் நிகழ்ந்து

வருகின்றன. இதனிடையே, கடந்த 12ஆம் தேதி முன்விரோதம் காரணமாக கண்ணன்(33) கொலை செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மட்டுமின்றி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் இதுபோன்ற

சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, அண்மையில் தென் மண்டல காவல்துறை ஐ ஜி அன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவின்குமாா் அபிநபு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் பங்கேற்றனா்.

இதில், தென்மாவட்டங்களில் கொலை கொள்ளை சம்பவங்களை நடைபெறாமல் தடுக்க காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூறுகையில், இம்மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். மேலும், ரவுடிகளின் பட்டியல் தயாா் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 5 காவல் துணை கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் 5 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.