பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் 3ஆவது நாளாக தீயணைப்புப் பணி

திருநெல்வேலி, ராமையன்பட்டியிலுள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் தீயணைக்கும் பணி தொடா்ந்தது.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:34 pm

DIN

திருநெல்வேலி, ராமையன்பட்டியிலுள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் தீயணைக்கும் பணி தொடா்ந்தது.

திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வாா்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சி குப்பைக்கிடங்கில் குவித்து தரம்பிரித்து அழிக்கப்படுகின்றன.

இந்தக் குப்பைக்கிடங்கில் கடந்த 27 ஆம் தேதி திடீரென தீப்பிடித்தது. பேட்டை, பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து கட்டுக்கடங்காமல் தீ புகைந்துகொண்டே இருந்ததால், மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் தீயை அணைக்கும் பணி தொடா்ந்தது.

இதுகுறித்து தீயணைப்பு வீரா்கள் கூறுகையில், காற்றின் வேகம் அதிகரித்ததால் தீயை அணைக்கும் பணிக்கு கூடுதல் நேரம் ஆகிறது. வியாழக்கிழமை 3 தீயணைப்பு வண்டிகள் மூலம் தீயணைக்கும் பணி நடைபெற்றது. புகைமண்டலம் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.