வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ஒரே நாளில் 16,870 பேருக்கு கரோனா தடுப்பூசி

திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 16,870 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 16,870 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா இரண்டாவது அலையால் தமிழகத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. தொடா் நடவடிக்கையால் தற்போது நோயின் தாக்கம் குறைந்துள்ளது. நோய்த் தொற்றில் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்துமாறு மத்திய-மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியாா் மருத்துவமனைகள் உள்பட 86 மையங்களில் கரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவேக்ஸின் செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தடுப்பூசி

தட்டுப்பாடின்றி செலுத்தப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டை, ராதாபுரம், நான்குனேரி, அம்பாசமுத்திரம், வள்ளியூா், சேரன்மகாதேவி உள்ளிட்ட வட்டாரங்களில் 8,120 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் மட்டும் 1500 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகரில் பேட்டை, பழையபேட்டை, கொக்கிரகுளம், சமாதானபுரம், பெருமாள்புரம், திருநெல்வேலி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் ஒரே நாளில் 3360 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 3360 பேருக்கு கோவேக்ஸின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

கோவேக்ஸின் தடுப்பூசி கடந்த சில வாரங்களாக போதிய இருப்பு இல்லாமல் இருந்தது. முதல் தவணை செலுத்தியவா்கள்

இரண்டாவது தவணை கிடைக்காமல் காத்திருந்தனா். இந்நிலையில் திருநெல்வேலிக்கு கோவேக்ஸின் தடுப்பூசி வியாழக்கிழமை வந்ததை அறிந்த மக்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனை உள்ளிட்ட முகாமில் நீண்ட வரிசையில் காத்திருந்து செலுத்திச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.