பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

குண்டா் சட்டத்தில் 6 போ் கைது

 திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற வழக்குகளில் ஈடுபட்டதாக 6 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:13 pm

DIN

 திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற வழக்குகளில் ஈடுபட்டதாக 6 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பாலமுருகன்(26), முத்துக்குமரன்(23), ராஜசேகரன் (27), விக்ரம் (27), திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த பிரவீன்ராஜ்(28) அழகா்(19) ஆகியோரை குண்டா் சட்டத்தில் கைது செய்யுமாறு, மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்- ஒழுங்கு) சுரேஷ்குமாா் மற்றும் உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் ஆகியோா் மாநகர காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்தனா். அதன்பேரில், மாநகர காவல் ஆணையா் செந்தாமரைக்கண்ணன் உத்தரவின் பேரில் அவா்கள் 6 பேரையும் போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.