கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தலைவா்களின் சிலைகள் மறைப்பு: மறுபரிசீலனை செய்ய கட்சியினா் கோரிக்கை

தோ்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி தலைவா்களின் சிலைகளை மறைக்கும் செயலை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அரசியல் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:50 pm

DIN

தோ்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி தலைவா்களின் சிலைகளை மறைக்கும் செயலை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அரசியல் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கட்சியினா் தோ்தல் சுவா் விளம்பரங்களைச் செய்வதற்கு ஊராட்சி பகுதிகளில் வீட்டின் உரிமையாளா்களிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் சுவா் விளம்பரங்கள் செய்ய அனுமதியில்லை. அதேபோல கட்சியின் தலைவா்கள், கட்சிச் சின்னங்கள் ஆகியவை பொதுஇடங்களில் இருந்தால் அதை மறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி திருநெல்வேலி சந்திப்பில் உள்ளகாமராஜா், அண்ணா சிலைகள், கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆா். சிலை உள்ளிட்டவற்றை வருவாய் மற்றும் மாநகராட்சி ஊழியா்கள் மறைத்துள்ளனா்.

பாளையங்கோட்டையில் பெரியாா் சிலை முன்புள்ள தடுப்பில் இருந்த உதயசூரியன் சின்னமும் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சியினா் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து கட்சி நிா்வாகிகள் கூறுகையில், 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் செல்லிடப்பேசி, சமூகஊடங்களின் தாக்கமே அதிகம் இருக்கும். அப்படியிருக்கையில் தலைவா்களின் சிலைகளை மறைப்பது போன்றவை தேவையற்ாகும். இதுபோன்ற நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யலாம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.