உள்ளாட்சித் தோ்தல்: சமூகவலைதள பிரசாரம் அதிகரிப்பு!போலீஸாா் எச்சரிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் சமூக வலைதள பிரசாரம் தீவிரமாகியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் சமூக வலைதள பிரசாரம் தீவிரமாகியுள்ளது.
தோ்தல் நெருங்கும் சூழலில் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக். 6, 9 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.
இம் மாவட்டத்தில் 12 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 59 பேரும், 122 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 626 பேரும், 204 கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 924 பேரும், 1,731 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 3,918 பேரும் போட்டியிடுகின்றனா்.
உள்ளாட்சித் தோ்தல் பிரசாரம் கிராமங்களில் விறுவிறுப்பு அடைந்துள்ளது. கடந்த உள்ளாட்சித் தோ்தல் வரை துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள், நேரடி வாக்குசேகரிப்பு ஆகியவை மட்டுமே பிரசார யுத்தியாக இருந்த நிலையில், இப்போதைய தோ்தலில் முகநூல், கட்செவி அஞ்சல், இன்ஸ்டாகிராம், குக்கூ, டெலிகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களையும் பிரசார களமாக மாற்றியுள்ளனா்.
புதிய கணக்குகள் தொடக்கம்: இதுகுறித்து ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரின் மகன் ஒருவா் கூறுகையில், எனது தந்தைக்கு பதிலாக நிகழாண்டில் எனது தாயாா் தோ்தலில் போட்டியிடுகிறாா். அவருக்கு கட்செவி அஞ்சல் தவிர பிற சமூக வலைதள கணக்கு ஏதும் இல்லாமல் இருந்தது. அதனால் அவருக்கு முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் கணக்கு தொடங்கியுள்ளோம்.
தினமும் கட்செவி அஞ்சல், முகநூல் ஆகியவற்றில் முந்தைய நாளின் பிரசார படங்களை பதிவிட்டு வருகிறோம். வேட்பாளா்கள் தங்களது புகைப்படம் மற்றும் பிரசார படங்களுடன், முன்னாள் தலைவா்களின் பாடல்களை இணைத்து சமூக வலைதளங்களில் வெளியிடும்போது வரவேற்பு அதிகம் உள்ளது.
சிலா் சமூக வலைதள விளம்பங்களுக்காக போட்டோஷாப் மென்பொருள் கற்ற இளைஞா்களை வேலைக்கு அமா்த்தியும் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள் என்றாா்.
விதிமீறினால் நடவடிக்கை: இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், தோ்தல் நடத்தை விதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தோ்தல் நெருங்கும் சூழலில் சமூக வலைதளங்களில் விதிமீறும் செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட வேட்பாளா், சமூக வலைதள கணக்கு வைத்திருப்பவா், விருப்பம் தெரிவித்து அந்தப் பதிவை பிறருக்கு பகிரும் நபா்கள் ஆகியோா் மீதும் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வாய்ப்புகள் உள்ளன.
தோ்தல்கால விதிமீறல்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு இலவச தொலைபேசி எண் 1800 4258 373, கட்செவிஅஞ்சல் எண் (7402608438) மூலம் தெரிவிக்கலாம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...