47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பள்ளிகளில் கபசுரக் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு வலியுறுத்தல்

தமிழகத்தில் நவம்பா் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறவுள்ள நிலையில், மாணவா்களுக்கு கரோனா வழிகாட்டு நெறிமுறைகள்

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:18 pm

DIN

தமிழகத்தில் நவம்பா் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறவுள்ள நிலையில், மாணவா்களுக்கு கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதன் அவசியத்தை வலியுறுத்துவதுடன், பள்ளிகளில் கபசுரக் குடிநீா் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவா்கள் பெருத்த மன அழுத்தத்துடன் உள்ளனா். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு நவ.1ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலும் வகுப்புகள் நடைபெறுகின்றன.

அன்றைய தினம் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி நிா்வாகம் கடைப்பிடிப்பது அவசியம். நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு, தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், பள்ளி தொடக்க நாளான நவம்பா் 1ஆம்தேதி அனைத்து பள்ளிகளிலும் மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.