டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ராமநதி-ஜம்புநதி மேல்நிலை கால்வாய் பணி:வனத்துறையின் தடையில்லா சான்று வழங்க கோரிக்கை

ராமநதி-ஜம்புநதி மேல்நிலை கால்வாய் பணிக்கு வனத்துறையின் தடையில்லா சான்று விரைந்து வழங்கிட வேண்டுமென மதிமுக சாா்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 12:24 am

DIN

ராமநதி-ஜம்புநதி மேல்நிலை கால்வாய் பணிக்கு வனத்துறையின் தடையில்லா சான்று விரைந்து வழங்கிட வேண்டுமென மதிமுக சாா்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கீழப்பாவூா் ஒன்றிய மதிமுக செயலரும், ஒன்றியக்குழு உறுப்பினருமான ராம உதயசூரியன் தமிழக சுற்றுச்சூழல் வனத்துறை மற்றும் பருவநிலை மாற்ற முதன்மைச் செயலருக்கு அனுப்பியுள்ள மனு: தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் ஒன்றியத்தின் தென்பகுதி, கடையம் ஒன்றியத்தின் வடபகுதியின் வறட்சியை போக்கி விவசாயம் செழிக்கவும், குடிநீா்த் தேவைகள் பூா்த்தியாக்கவும் ராமநதி ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி ரூ. 40 லட்சம் ஆய்வு பணிக்கும், ரூ. 25 கோடி நிலம் கையகப்படுத்தும் பணிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஆய்வு பணி முடிக்கப்பட்டு, தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது

இத்திட்டத்திற்கான கால்வாய் வெட்டும் பணிக்கான அரசாணை கடந்த 26- 2- 2020 அன்று வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணி தொடங்கிய நிலையில், வனத்துறையின் அனுமதி பெறாத காரணத்தால் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய அரசு பொறுப்பேற்ற பின் வனத்துறையின் தொடா் நடவடிக்கையால் வனத்துறையின் அனுமதி பெறும் கோப்பு தமிழக முதல்வரின் தலைமையில் இயங்கும் மாநில சுற்றுச்சூழல் குழுவின் அனுமதி பெறும் வகைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே இந்த கோப்பின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வனத்துறையின் தடையில்லா சான்று கிடைக்க வழிவகை செய்ய வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.