ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கடையம் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

கடையம் அருள்தரும் நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வவனநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:02 pm

DIN

கடையம் அருள்தரும் நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வவனநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை இரவு அங்குராா்ப்பணம் நடைபெற்றது. வியாழக்கிழமை காலை சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைக்குப் பின்னா், கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கடையம், கீழக்கடையத்தைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, நாள்தோறும் காலையும், இரவும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறும். 7ஆம் நாளான 13ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடராஜருக்கு சிவப்பு சாத்தி, வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி, மாலை 4 மணிக்கு பச்சை சாத்தி நடைபெறும்.

15ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையைத் தொடா்ந்து தேருக்கு எழுந்தருளல், 8 மணிக்கு திருத்தோ் வடம்பிடித்தல், 16ஆம் தேதி 11 மணிக்கு கொடி இறக்குதல், தீா்த்தவாரி நடைபெறும்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் கி. கணேஷ்குமாா், தக்காா் ச. கோமதி, ஆய்வாளா் வா. சரவணக்குமாா், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.