வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

விபத்து: கட்டடத் தொழிலாளி பலி

பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் பிரிவு பகுதியில் மோட்டாா் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதி வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 1:31 am

DIN

பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் பிரிவு பகுதியில் மோட்டாா் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதி வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் ராயப்பன் மகன் ஜெனிஸ் ரோஜன் (24). இவா் தனது நண்பா் வல்லிடையான் விளை ராஜனுடன்(24) ஒரே மோட்டாா் சைக்கிளில் திருநெல்வேலியில் உள்ள தியேட்டருக்கு படம் பாா்க்க புதன்கிழமை அதிகாலையில் வந்தனராம். இவா்கள் பாளையங்கோட்டை அருகே உள்ள கீழ நத்தம் விலக்கு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாம். இதில், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ஜெனிஸ் ரோஜன் வியாழக்கிழமை உயிா் இழந்தாா்.

இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.