பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை! அடுத்த வாரம் 2 நாள்கள்!
பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது பற்றி...
பங்குச் சந்தை | கோப்புப் படம்
IANS
பங்குச் சந்தை | கோப்புப் படம்
IANS
ஸ்ரீ ராம நவமி பண்டிகையை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு போரில் பதற்றம் தணியும் என்ற நம்பிக்கையால், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை தொடா்ந்து 2-ஆவது நாளாக ‘காளை’யின் ஆதிக்கம் நீடித்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்துடன் நேற்று நிறைவடைந்தன.
மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் குறியீடு 1,205 புள்ளிகள் (1.63 சதவீதம்) கூடுதலுடன் 75,273.45-இல் நிலைபெற்றது.
தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 394.05 புள்ளிகள் (1.72 சதவீதம்) கூடுதலுடன் 23,306.45-இல் நிலைபெற்றது.
இந்த நிலையில், பங்குச் சந்தை விடுமுறை நாள்காட்டியின் அடிப்படையில், ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அடுத்த வாரம் ஸ்ரீ மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு மார்ச் 31 மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு ஏப்ரல் 3 ஆகிய தேதிகளிலும் பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...