இந்திய பங்குச் சந்தை வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை காலை முதல் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், சில நாள்களாக இறங்குமுகத்தில் இருந்த மும்பை பங்குச்சந்தை மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற நம்பிக்கையில் எழுச்சிப் பெறத் தொடங்கியுள்ளது.
இந்திய பங்குச் சந்தை இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில், காலை 11.10 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து 78,231.81 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 77 புள்ளிகள் உயர்ந்து 24,273.90 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸில் ஹிந்துஸ்தான், மாருதி, ஐடிசி, ரிலையன்ஸ், டெக் மகேந்திரா, இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், டிசிஎஸ், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டியைப் பொறுத்தவரை வங்கி, ஃபைனன்ஸ், ஆட்டோ, மிட் கேப், ஸ்மால் கேப் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் ஏற்றத்துடனும், ஐடி துறை பங்குகள் சரிவுடனும் வர்த்தகமாகி வருகிறது.
Summary
Indian Stock Market Trades Higher!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிலையாக வர்த்தகமாகும் பங்குச்சந்தை! வங்கி, ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்வு!

நிலையாக வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஐடி, மீடியா பங்குகள் உயர்வு!

பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 800 புள்ளிகள் குறைந்தது! ஐடி, பார்மா பங்குகள் சரிவு!

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!




