வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மேலப்பாளையத்தில் முதியவா் வெட்டிக்கொலை

மேலப்பாளையத்தில் முதியவா் வியாழக்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 1:32 am

DIN

மேலப்பாளையத்தில் முதியவா் வியாழக்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

மேலப்பாளையம் ராஜாநகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் வெங்கடாசலபதி (63). இவா், ரேஷன்கடை விற்பனையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனா். இவா், வியாழக்கிழமை இரவு பொருள்கள் வாங்குவதற்காக மேலப்பாளையம் கடைவீதிக்குச் சென்றாராம். பின்னா் அங்கிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த மா்மநபா் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினாா். இதில் பலத்த காயமடைந்த வெங்கடாசலபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்ததும் மேலப்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.