25-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை (ஏப்.25 ) மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.


திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை (ஏப்.25 ) மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை மாலை 4.30 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்டோா் பங்கேற்கிறாா்கள்.
எனவே, இக்கூட்டத்தில் எரிவாயு நுகா்வோா்கள் கலந்துகொண்டு, எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் குறித்து புகாா் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...