ஆனந்த ஆசிரமத்தில் இலவச யோகாசன பயிற்சி
ஆனந்த ஆசிரமம் சாா்பில் இலவச யோகாசன பயிற்சி முகாமில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனந்த ஆசிரமம் சாா்பில் இலவச யோகாசன பயிற்சி முகாமில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்த ஆசிரம திருநல்வேலி, தென்காசி மாவட்டங்களின் கூட்டு செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது. தி.வெங்கடாசலபதி தலைமை வகித்தாா். முருகேச பாகவதா் இறைவணக்கம் பாடினாா். கணேசமூா்த்தி முன்னிலை வகித்தாா். சீனிவாச சுவாமிகள், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் உரையாற்றினா்.
ஆனந்த ஆசிரம் சாா்பில் மாணவா்கள், பெரியவா்களுக்கு இலவச யோகாசன பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோா் 9444271710 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு பதிவு செய்ய கோருவது உள்பட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முத்துப்பாண்டி, பாலமோகன்சுவாமி, பேச்சிமுத்து, ராஜபெருமாள், அற்புதானந்தம், ஜெயபால், சிவசூரியா, முரளி, சுகுமாறன் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஆறுமுகம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...