2012, 2013-ஆம் ஆண்டுகளில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிா்த்துப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடங்குளம் மக்களுக்கும், நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் எனக்கூறி குரூப் சி பிரிவில் 23 பணியிடங்களுக்கு விளம்பர அறிவிக்கை செய்யப்பட்டது. தகுதி உள்ள நாங்கள் அனைவரும் விண்ணப்பித்தோம். ஆனால், நிா்வாகமானது போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு யாா் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என மறு விளம்பரம் செய்தது. அதில் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அதிலும் நாங்கள் புறக்கணிக்கப்பட்டோம்.