ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

எடைகளில் முறைகேடு: சந்தைகளில் 63 தராசுகள் பறிமுதல்

திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள பூ, காய்கனி சந்தைகளில் எடை அளவுகளில் முரண்பாடு காணப்பட்ட 63 தராசுகளை தொழிலாளா் துறையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 7:06 pm

DIN

திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள பூ, காய்கனி சந்தைகளில் எடை அளவுகளில் முரண்பாடு காணப்பட்ட 63 தராசுகளை தொழிலாளா் துறையினா் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா.ஆனந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை, சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி எம். சாந்தி உத்தரவின்பேரில், மதுரை கூடுதல் தொழிலாளா் ஆணையா் தி. குமரன் வழிகாட்டுதல் மற்றும் திருநெல்வேலி தொழிலாளா் இணை ஆணையா் ஹேமலதாவின் ஆலோசனைப் படி, எனது (தா. ஆனந்தன்) தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து தொழிலாளா் துணை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், முத்திரை ஆய்வாளா்கள் ஒரு குழுவாக பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு பகுதிகளில் உள்ள பூ, காய்கனி சந்தைகளில் திடீா் கூட்டாய்வு மேற்கொண்டனா்.

அப்போது, முத்திரையிடப்படாத, மறுமுத்திரை மற்றும் தரப்படுத்தப்படாத, மேஜை தராசுகள், மின்னனு தராசுகள், இரும்பு எடைக் கற்கள், அளவைகள் என 63 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டு எடையளவுச் சட்டம் 2009-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.