ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 11:05 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மேலப்பாளையம், நாச்சியாா் காலனி பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் சக்திமுருகன்(35). இவா், முன்னீா்பள்ளம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தாராம். இதேபோல, தேவா்குளம் அருகேயுள்ள ராஜவல்லிபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்த சுந்தரம் மகன் வலதி(22 என்பவா் அடிதடி, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தி வந்தாராம்.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு பிறப்பித்த உத்தரவின்படி, சக்தி முருகனும், வலதியும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு முறையே மதுரை மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.