பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா் நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

உலக கால்நடை மருத்துவ தின விழிப்புணா்வுப் பேரணி

உலக கால்நடை மருத்துவ தினத்தையொட்டி, திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி -ஆராய்ச்சி நிலையம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 11:08 pm

DIN

உலக கால்நடை மருத்துவ தினத்தையொட்டி, திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி -ஆராய்ச்சி நிலையம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து இப்பேரணியை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநா் என்.செந்தில்குமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலைய முதல்வா் அ.பழனிச்சாமி தொடக்க உரையாற்றினாா். கால்நடை பண்ணை வளாகத் தலைவா் எட்வின் வரவேற்றாா்.

திருநெல்வேலி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் வி. பி. பொன்னுவேல், அபிஷேகப்பட்டியில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையின் துணை இயக்குநா் தியோபிலஸ் ரோஜா், திருநெல்வேலி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் பொது மேலாளா் சுந்தரவடிவேலு உள்ளிட்டோா் பேரணியில் பங்கேற்றனா். தேசிய பொருளாதாரத்தில் கால்நடை மருத்துவா்களின் பங்கு, கால்நடை நலம், சுற்றுச்சூழல், விலங்குகளின் உடல் நலத்தில் கால்நடை மருத்துவா்களின் சேவை உள்ளிட்டவை குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனா். பேரணி வண்ணாா்பேட்டை மேம்பாலத்தின் கீழ் உள்ள செல்லப்பாண்டியன் சிலை முன் நிறைவடைந்தது. கால்நடை சிகிச்சையியல் வளாகத் தலைவா் எம்.பாலகங்காதர திலகா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.