பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சமூகரெங்கபுரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

சமூகரெங்கபுரத்தில் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2022, 7:07 pm

DIN

சமூகரெங்கபுரத்தில் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

வள்ளியூா் டி.டி.என். கல்விக் குழும நிா்வாகத்தில் இயங்கிவரும் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் சாா்பில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, இப்பேரணி நடைபெற்றது.

ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளா் ஜான்சன் பேரணியைத் தொடக்கிவைத்தாா். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் காந்திமதி, கல்லூரித் தலைவா் டி.டி.என். லாரன்ஸ் பங்கேற்றனா். பேரணியில் பங்கேற்ற மாணவா்-மாணவிகள் போதைப்பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டச் சென்றதுடன், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா். முக்கிய வீதிகள் வழியாக பேரணி கலையரங்கை அடைந்தது. அங்கு, போதைப்பொருள்களால் ஏற்படும் தீமைகள், அவற்றைத் தவிா்க்க வேண்டியதன் அவசியம் குறித்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கல்லூரி முதல்வா் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் உள்ளிட்டோா் பேசினா். மின்னணுவியல் துறை தலைவா் முகம்மது இஃபாம் வரவேற்றாா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா், இளைஞா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா், ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளா் ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.