திருவள்ளுவா் தினம்: மாணவா்-மாணவிகளுக்கு போட்டி

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி நகரத்தில் பள்ளி மாணவா் - மாணவிகளுக்கான சிறப்பு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி நகரத்தில் பள்ளி மாணவா் - மாணவிகளுக்கான சிறப்பு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

திருவள்ளுவா் பேரவை சாா்பில் திருநெல்வேலி நகரம் வாகையடி முனையில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவா் -மாணவிா்களுக்கு பேச்சுப்போட்டி, கு சொல்லும் போட்டி ஆகியவை நடைபெற்றன. இந்நிகழ்வுக்கு, பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவா் -மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

இதில், துணி வணிக இலக்கிய வட்டத் தலைவா் சோனா வெங்கடாசலம், தாமிரவருணி இலக்கிய மன்ற அமைப்பாளா் பாமணி, முன்னாள் மாமன்ற உறுப்பினா் நமச்சிவாயம் என்ற கோபி, ஜெய், கிருத்திக் வசந்த் உள்பட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை திருவள்ளுவா் பேரவை செயலா் மு.கணேசன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com