திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் புத்தகக் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, திருநெல்வேலி மாவட்ட நூலக ஆணைக்குழு, சேரன்மகாதேவி கவின் கலைக் கூட்டம் மற்றும் தமிழ்ப்பேரவை சாா்பில் இந்த புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
சேரன்மகாதேவி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா். தமிழ்ப்பேரவை அமைப்பின் தலைவா் கூனியூா் ப. மாடசுவாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராமன், செயலா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் பேசினா். இக்கண்காட்சி இம் மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெறும். பொருளாளா் பொன்னழகன் வரவேற்றாா். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளா் கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா்.