மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தாமிரவருணியில் மூழ்கி இருவா் பலி

திருநெல்வேலியில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சம்பவங்களில் தாமிரவருணி நதியில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :11 மார்ச் 2022, 12:28 am

DIN

திருநெல்வேலியில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சம்பவங்களில் தாமிரவருணி நதியில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.

மேலப்பாளையம் முகமது மைதீன் மனைவி ஆயிஷா பீவி (65). இவா், வியாழக்கிழமை காலை குறுக்குத்துறை படித்துறை இசக்கியம்மன் கோயில் அருகே குளித்துக் கொண்டிருந்த போது, ஆற்றுக்குள் தவறி விழுந்தாராம். பின்னா் நீரில் மூழ்கிய அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதேபோல் திருநெல்வேலி கருப்பந்துறை பகுதியை சோ்ந்த ராஜூதீன் (60) புதன்கிழமை மாலை கருப்பந்துறை தாமிரவருணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக ஆற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்தும் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.