நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வலுவான அணியாக இருந்தது: டு பிளெஸ்ஸிஸ்

கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகவும் வலுவானதாக இருந்ததாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

News image

கௌதம் கம்பீர்

படம் | கேகேஆர் (எக்ஸ்)

Updated On :26 மார்ச் 2026, 11:02 am

இணையதளச் செய்திப் பிரிவு

கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகவும் வலுவானதாக இருந்ததாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் நாளை மறுநாள் (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி திடலில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது.

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே வீரர்கள் பலரும் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகி வருகின்றனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களான ஹர்ஷித் ராணா மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் தொடரிலிருந்து முழுவதுமாக விலகினர். மதீஷா பதிரானாவும் தொடக்கப் போட்டிகள் சிலவற்றில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகவும் வலுவானதாக இருந்ததாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கௌதம் கம்பீரை அவருடன் விளையாடிய மற்ற வீரர்கள் அனைவரும் பார்க்கும் பார்வையிலிருந்து என்னுடையது வித்தியாசமாக இருக்கும். அவருக்கு எதிராக விளையாடும்போது அவர் எப்போதும் வில்லனாக இருப்பார். ஆனால், வீரர்கள் அவர் அப்படி இருப்பதற்கு மதிப்பளிக்க வேண்டும். அவர் அப்படி இருப்பதே கடும் போட்டியாளராக அவரை உருவாக்கியுள்ளது. நாம் யாராலும் விரும்பப்பட வேண்டும் என்பது குறித்து கௌதம் கம்பீர் கவலைப்படுவதில்லை. கேப்டனாக, பயிற்சியாளராக அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை செய்து முடிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்.

கௌதம் கம்பீருக்கு எதிராக விளையாடும்போது, அவரது அணியை தோற்கடிக்க வேண்டும் எனத் தோன்றும். ஏனெனில், அவர் எதிரணியாக மிகவும் சவாலளிப்பார். ஆனால், அவர் உருவாக்கி வைத்துள்ள சாதனைகளை நாம் மதிக்க வேண்டும். அவரது சாதனைகளைப் பார்த்தால், அவரை நீங்கள் வெகுவாகப் பாராட்டுவீர்கள். அணியின் தலைவராக அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரது தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகவும் வலுவாக இருந்தது. ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளான மும்பை, சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகளை எடுத்துக் கொண்டால், கௌதம் கம்பீர் - ஷ்ரேயாஸ், தோனி - ஸ்டீஃபன் பிளெமிங் அதில் வெற்றிக் கூட்டணியாக இருப்பார்கள் என்றார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கௌதம் கம்பீர் தலைமையில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்ற பிறகு, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டங்களை இந்திய அணி வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Former South African cricketer Faf du Plessis has said that the Kolkata Knight Riders team led by Gautam Gambhir was very strong.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.