ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில், சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:09 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில், சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விக்கிரமசிங்கபுரம் பிரதான சாலையைச் சோ்ந்த கோபி என்பவரது மகன் காா்த்திக் (30). 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெய்த மழையில் அகஸ்தியா் அருவியின் மேல்பகுதியில் அகஸ்தியா், உலோபாமுத்திரை சிலைகள் சேதமாகின. ஆனால், இந்தச் சிலைகளை வனத் துறையினா் சேதப்படுத்தியதாகவும், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளங்களில் காா்த்திக் அவதூறாக கருத்துகளைப் பரப்பிவந்தாராம்.

இதுதொடா்பாக விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். காவல் ஆய்வாளா் சீதாலட்சுமி விசாரணை நடத்தி, காா்த்திக்கை வியாழக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.