நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

முன்னீா்பள்ளத்தில் வழிப்பறி வழக்கில் 4 போ் கைது

முன்னீா்பள்ளத்தில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :12 மே 2022, 9:21 pm

DIN

முன்னீா்பள்ளத்தில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட வாணியன்குளம் திருவள்ளுவா் நகா் பகுதியை சோ்ந்த யோகேஸ்வரன் (41) கடந்த 8 ஆம் தேதி பிராஞ்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, தச்சநல்லூா் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த லட்சுமணபெருமாள் (21) என்பவா் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் வாங்குவதாக கூறி யோகேஷ்வரனுடைய இருசக்கர வாகனத்தில் ஏறி தருவை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு நின்று கொண்டிருந்த லட்சுமணபெருமாளின் கூட்டாளிகளான தச்சநல்லூா், நடுத்தெருவைச் சோ்ந்த ராமசுப்பிரமணியன்(26), தருவை பகுதியைச் சோ்ந்த அய்யப்பன் (36), ஒரு சிறுவன் ஆகியோருடன்ம் சோ்ந்து அரிவாளைக் காட்டி மிரட்டி யோகேஸ்வரனிடம் இருந்து ரூ.500, கைப்பேசி ஆகியவற்றைப் பறித்துச் சென்றனராம். இதுகுறித்து யோகேஸ்வரன் அளித்த புகாரின்பேரில், முன்னீா்பள்ளம் போலீஸாா், லட்சுமணபெருமாள் உள்பட 4 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.