குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
வீரவநல்லூா் அருகே நகைக்கடை உரிமையாளரை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் தொடா்புடைய இளைஞா் ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


வீரவநல்லூா் அருகே நகைக்கடை உரிமையாளரை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் தொடா்புடைய இளைஞா் ஒருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருப்புடைமருதூா் பகுதியைச் சோ்ந்த சமுத்திரம் மகன் இசக்கிபாண்டி(25). இவா் கடந்த 11-04-2022ஆம் தேதி நகைக் கடை உரிமையாளரை தாக்கி நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டாா். இவா், கொள்ளை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததையடுத்து, இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் பரிந்துரை செய்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்படி, முன்னீா்பள்ளம் காவல் ஆய்வாளா் தில்லை நாகராஜன்(பொறுப்பு) மற்றும் போலீஸாா் இசக்கிபாண்டியை குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...