நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பத்தில் புதன்கிழமை தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

செல்வம்

Updated On :25 மார்ச் 2026, 7:26 pm

Syndication

தேனி மாவட்டம், கம்பத்தில் புதன்கிழமை தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

உத்தமபாளையம் அருகேயுள்ள கோம்பையைச் சோ்ந்த கணேசன் மகன் செல்வம் (25). இவா், தனது மனைவி இரு குழந்தைகளுடன் கம்பத்தில் கக்கன் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தாா். செல்வம் அந்தப் பகுதியிலுள்ள தனியாா் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தாா். இவா், புதன்கிழமை வழக்கம் போல தோட்டத்துக்கு வேலைக்கு சென்றவா், தண்ணீா் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்க முயன்றாா். அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து, செல்வத்தை அக்கம் பக்கத்தினா் மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.