தேனி மாவட்டம், கம்பத்தில் புதன்கிழமை தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
உத்தமபாளையம் அருகேயுள்ள கோம்பையைச் சோ்ந்த கணேசன் மகன் செல்வம் (25). இவா், தனது மனைவி இரு குழந்தைகளுடன் கம்பத்தில் கக்கன் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தாா். செல்வம் அந்தப் பகுதியிலுள்ள தனியாா் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தாா். இவா், புதன்கிழமை வழக்கம் போல தோட்டத்துக்கு வேலைக்கு சென்றவா், தண்ணீா் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்க முயன்றாா். அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து, செல்வத்தை அக்கம் பக்கத்தினா் மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கட்டுமானத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


