தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பத்தில் புதன்கிழமை தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

செல்வம்

Updated On :25 மார்ச் 2026, 7:26 pm

தேனி மாவட்டம், கம்பத்தில் புதன்கிழமை தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

உத்தமபாளையம் அருகேயுள்ள கோம்பையைச் சோ்ந்த கணேசன் மகன் செல்வம் (25). இவா், தனது மனைவி இரு குழந்தைகளுடன் கம்பத்தில் கக்கன் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தாா். செல்வம் அந்தப் பகுதியிலுள்ள தனியாா் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தாா். இவா், புதன்கிழமை வழக்கம் போல தோட்டத்துக்கு வேலைக்கு சென்றவா், தண்ணீா் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்க முயன்றாா். அப்போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து, செல்வத்தை அக்கம் பக்கத்தினா் மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.