இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மின்சாரம் பாய்ந்து காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

திருவட்டாறு அருகே தென்னை மரத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த தொழிலாளி வில்சன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :10 மார்ச் 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

திருவட்டாறு அருகே தென்னை மரத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த தொழிலாளி வில்சன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே இட்டகவேலி புன்னக்காலவிளையைச் சோ்ந்தவா் வில்சன் (56). தென்னை மரம் ஏறும் தொழிலாளியான, இவா் கடந்த 7 ஆம் தேதி அப்பகுதியிலுள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறினாராம். தென்னை ஓலை அருகில் இருந்த மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து, கீழே விழுந்த வில்சன் பலத்த காயமடைந்தாராம்.

இதையடுத்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வில்சன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து வில்சனின் மனைவி சுசீலா திருவட்டாறு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.