/

மின்சாரம் பாய்ந்து ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் ரயில் நிலையத்தில் பணியிலிருந்த ஒப்பந்தத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :4 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் ரயில் நிலையத்தில் பணியிலிருந்த ஒப்பந்தத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரா.மணிகண்டன்(38). ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளியான இவா் புதன்கிழமை வழக்கம் போல் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி- மங்களூா் வாராந்திர விரைவு ரயிலில் தண்ணீரால் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விழுப்புரம் இருப்புப் பாதை காவல் நிலைய போலீஸாா் மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.