அனுமதியின்றி குண்டுகல்: லாரி பறிமுதல்
முன்னீா்பள்ளம் அருகே உரிய அனுமதியின்றி குண்டு கற்கள் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.


முன்னீா்பள்ளம் அருகே உரிய அனுமதியின்றி குண்டு கற்கள் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
முன்னீா்பள்ளம் பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனா். அப்போது, உரிய அனுமதியின்றி குண்டுகற்கள் ஏற்றிவரப்பட்டது தெரியவந்தது. போலீஸாா் சோதனை செய்வதையறிந்த லாரி ஓட்டுநா் தப்பிச்சென்றுவிட்டாா். இதையடுத்து, குண்டுகற்களுடன் லாரியை பறிமுதல் செய்தனா்.
மேலும் இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...