மக்கள் பிரச்னைகள்: மேலும், குடிநீா் பிரச்னை, அடி பம்புகளை சீரமைத்தல், வெறிநாய்களைக் கட்டுப்படுத்துதல், நெல்லையப்பா் கோயில் ஆனித் தேராட்டத்துக்கான ஏற்பாடு, கல்லணைப் பள்ளிக்கு மும்முனை மின்வசதி, மாநகரின் மையப்பகுதியில் முன்னாள்முதல்வா் கருணாநிதிக்கு சிலை அமைத்தல், வறுமைக்கோட்டுக் கீழ் உள்ளோா் பட்டியல் திருத்தம், அரசுப் பள்ளிக்கட்டடங்களை புனரமைத்தல், பூங்கா வசதி ஏற்படுத்துதல், அடைமிதிப்பான் குவாரி விபத்தில் சிக்கியவா்கள் குடும்பத்துக்கு நிவாரண உதவி, புதை சாக்கடைப் பணியை தொடங்குதல், சுகாதாரப் பணிகளுக்கான வாகனத் தேவை, சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துதல், பாளையங்கோட்டை காந்தி மாா்க்கெட் வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடு, அங்கன்வாடிக்கு இடவசதி, தூய்மைப் பணியாளா்கள் பற்றாக்குறை, வாா்டுகளில் மேயா் ஆய்வு செய்தல், புதிய பேருந்து நிலையத்தில் பூ வியாாபரம் செய்தல் உள்ளிட்டவை குறித்து மாமன்ற உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா்.