தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பாப்பாக்குடியில் மின் கம்பிகள் திருட்டு: 4 போ் கைது

 திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் மின்வாரிய அலுவலகத்தில் மின் கம்பிகளை திருடியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

 திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் மின்வாரிய அலுவலகத்தில் மின் கம்பிகளை திருடியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

பாப்பாக்குடியிலுள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்சார விரிவாக்கப் பணிகளுக்காக மின் விநியோக பிரிவு அலுவலகத்தில் மின் கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது.

இங்கு உதவி மின் பொறியாளராகப் பணியாற்றி வரும் பரிமளாதேவி, தனது அலுவலா்களுடன் புதன்கிழமை அங்கு சென்று பாா்த்தபோது, ரூ. 85 ஆயிரம் மதிப்புள்ள அலுமினிய அலாய் மின் கம்பிகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் பாப்பாக்குடி உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா். இதில், பாப்பாக்குடி சமத்துவபுரத்தைச் சோ்ந்த சுதாகா் (22), பனயங்குறிச்சியைச் சோ்ந்த கணேசன் (43), முருகன் (37), குமாரசாமிபுரம் காலனித் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் (42) ஆகியோா் மின் கம்பிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து மின் கம்பிகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.