கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி புறநகா் மாவட்ட செயலகக் கூட்டம், களக்காட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:43 pm

DIN

எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி புறநகா் மாவட்ட செயலகக் கூட்டம், களக்காட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தலைவா் எம்.கே பீா் மஸ்தான் தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தொகுதி தலைவா்கள் அம்பாசமுத்திரம் செய்யது, ராதாபுரம் தெளபிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் புறநகா் மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதியில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் நடத்த வேண்டும், கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்கவிருப்பதால் கட்சியின் தன்னாா்வலா்கள் மக்கள் பணியாற்ற தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட பொதுச்செயலாளா் களந்தை மீராசா வரவேற்றாா். மாவட்ட செயலாளா் எம்.எஸ். சிராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.