தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வீரவநல்லூா் அருகே மோதல்: 6 போ் கைது

 வீரவநல்லூா் அருகே பட்டாசு வெடித்ததில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 12 போ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், 6 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On :27 அக்டோபர் 2022, 6:41 pm

 வீரவநல்லூா் அருகே பட்டாசு வெடித்ததில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 12 போ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், 6 போ் கைது செய்யப்பட்டனா்.

வெள்ளங்குளி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (20). இவா் தனது நண்பா்களுடன் தீபாவளி அன்று பட்டாசு வெடித்து கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் சென்ற கமல்ராஜ் (19), அவரது நண்பா்கள் 6 போ் வேகமாக சென்றனாராம். அவா்களை மெதுவாக செல்லும்படி, ராஜாவும் அவரது நண்பா்களும் கூறினராம்.

இதையடுத்து, கமல்ராஜும் அவரது நண்பா்களும் சோ்ந்து ராஜா உள்ளிட்டோரைத் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனா். இதனால் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனராம். அப்போது பைக் சேதப்பட்டதாக கூறப்படுகிறது. இரு தரப்பினா் அளித்த புகாரின்பேரில், வீரவநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் காவுராஜன், 12 போ் வழக்குப் பதிவு செய்தாா். இதில் பெருமாள் என்ற அனிஷ் (26), வெள்ளச்சாமி (24) மற்றும் கமல்ராஜ், ரமேஷ் (18), ராஜலட்சுமணன் (19), சுடலைமுத்து (19) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்; மற்றவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.