தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சேரன்மகாதேவி கொழுந்துமாமலை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சேரன்மகாதேவி களக்காடு பிரதான சாலையில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இக் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.