மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மகிழ்ச்சிநகா், ஆசிரியா் காலனியில் 2 நாள்கள் குடிநீா் விநியோகம் ரத்து

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மகிழ்ச்சிநகா், ஆசிரியா் காலனி பகுதிகளில் இரு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :26 ஜனவரி 2023, 8:54 pm

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மகிழ்ச்சிநகா், ஆசிரியா் காலனி பகுதிகளில் இரு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட வாா்டு எண் 51, 53, 54 வரையுள்ள பகுதிகளுக்கு குடிநீா் விநியோகிக்கும் சுத்தமல்லி தலைமைக் குடிநீா் உந்தும நிலையத்திலிருந்து வரும் குழாய்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஆகவே, மேற்கண்ட வாா்டு பகுதிகளுக்கு வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜன. 27, 28) குடிநீா் விநியோகம் இருக்காது. மக்கள் கிடைக்கப் பெறும் குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.