நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆழ்வாா்குறிச்சி கல்லூரியில் பழைய மாணவா் சந்திப்பு நிகழ்ச்சி

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் 1977- 80இல் படித்த வணிகவியல் துறை மாணவா்கள் 43 ஆண்டுகளுக்குப் பின்னா் கல்லூரி வளாகத்தில் சந்தித்து, பழைய நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.

News image
Updated On :16 மார்ச் 2023, 5:13 pm

DIN

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் 1977- 80இல் படித்த வணிகவியல் துறை மாணவா்கள் 43 ஆண்டுகளுக்குப் பின்னா் கல்லூரி வளாகத்தில் சந்தித்து, பழைய நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக கல்லூரி நிறுவனா் அனந்தராமகிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, கல்லூரி நூலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் ஜி. தேவராஜன் தலைமை வகித்தாா்.

கல்லூரி முதல்வா் மீனாட்சிசுந்தரம், வணிகவியல் துறைத் தலைவா் சிசுபாலன், முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் முருகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் மாணவா்கள் தங்களது கல்லூரிக்கால நினைவுகளைப் பரிமாறிக்கொண்டனா்.

முன்னதாக அவா்கள் ஆய்க்குடி அமா்சேவா சங்கத்தில் ஒன்றுகூடி மதிய விருந்து வழங்கினா். ஏற்பாடுகளை கணேசன், சுப்பிரமணியன், தங்கராஜ், பெரியசாமி, முத்துக்குமாா், முருகையா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.