போக்ஸோவில் ஆசிரியா் கைது

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் 9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆசிரியரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் 9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆசிரியரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறையைச் சோ்ந்த அந்தோணி பனிராஜ் மகன் சகாய டெல்வின் ராஜ் (32). அங்குள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளாா். இவா், அப்பள்ளியின் 9ஆம் வகுப்பு மாணவியை கடந்த 13ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாராம். இதுகுறித்த புகாரின்பேரில், சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் டென்சி போக்ஸை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அந்த ஆசிரியரை கைது செய்தாா். டிஎஸ்பி ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com