திருநெல்வேலி நகரத்தில் பாழடைந்த கட்டடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் பணியாற்ற எதிா்ப்புத் தெரிவித்து வாக்குச்சாவடி அலுவலா்கள் வியாழக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி நகரம் காவல் நிலையம் எதிரே 248-ஆவது வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு வியாழக்கிழமை மாலையில் தோ்தல் பணிக்காக வாக்குச்சாவடி அலுவலா்கள் வந்தனா். ஆனால், அந்தக் கட்டடம் பழுதடைந்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அங்கு குறைந்த நபா்களே இருக்க முடியும் என்பதால், வாக்களிக்க பொதுமக்கள் வரும்போது சிரமம் ஏற்படும் எனக் கூறி, அந்த வாக்குச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றித்தருமாறு தோ்தல் நடத்தும் உதவி அலுவலா்களிடம் வாக்குச்சாவடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே உள்ள இடங்களில் வாக்காளா்கள் வந்து செல்ல ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதால் அலுவலா்கள் பணியைத் தொடங்கினா்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10,040 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முதல்கட்ட பயிற்சி

தபால் வாக்குகள்: வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

தோ்தல் பொறுப்பு அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற அறிவுரை

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

