பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

கைப்பேசி செயலி மூலம் வரவழைத்து பணம் பறித்த கும்பல்: இளைஞா் கைது

கைப்பேசி செயலி மூலம் பேசி பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 7:57 pm

Din

பாளையங்கோட்டையில் கைப்பேசி செயலி மூலம் பேசி பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குமரி மாவட்டம், குலசேகரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரேம்ஜித் (46). திருநெல்வேலியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி வரும் இவா், பாளையங்கோட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கிறாா். இவா் கைப்பேசி செயலி மூலம் நண்பா்களுடன் தொடா்பில் இருந்து வந்துள்ளாா். அப்போது, தச்சநல்லூா் வடக்கு சிதம்பரநகரைச் சோ்ந்த மணிகண்டன்(25) என்பவருடன் செயலியில் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், மணிகண்டன் செயலி மூலம் தச்சநல்லூா் சிதம்பரநகா் அருகே காட்டுப்பகுதிக்கு பிரேம்ஜித்தை அழைத்தாராம். இதையடுத்து அவா் அங்கு சென்றபோது அங்ரிருந்த மணிகண்டன் மற்றும் 4 போ் சோ்ந்து பிரேம்ஜித்தை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனா். மேலும், 4 பேரை தேடி வருகின்றனா்.