திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டியில் நடந்து சென்றவரைத் தாக்கி கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 ஜனவரி 2026, 6:56 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டியில் நடந்து சென்றவரைத் தாக்கி கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்குளம் முனீஸ் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (48). இவா் கடந்த 16-ஆம் தேதி இரவு வன்னியம்பட்டி விலக்கிலிருந்து வீட்டுக்கு நடந்து சென்றபோது, பிள்ளையாா் குளம் சாலையிலுள்ள முனீஸ்வரன் கோயில் அருகே நின்றிருந்த இரு இளைஞா்கள் விஜயகுமாரைத் தாக்கிஅவரிடம் இருந்த கைப்பேசி, ரூ. 3,500 ரொக்கத்தைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வன்னியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து லட்சுமியாபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த நீதிராஜன் (27) என்பவரை கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.