தடுப்புக் காவலில் இளைஞா் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை கடலூா் மாவட்ட போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
 வேல்முருகன்
வேல்முருகன்
Updated on

வழிப்பறியில் ஈடுபட்ட பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை கடலூா் மாவட்ட போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், தொழுதூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீன் (26). இவா், 22.12.2025 அன்று ராமநத்தம் சென்றிருந்தாா். அப்போது, அங்கு வந்த பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், திருமாந்துறை கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் (25), கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து பிரவீனிடமிருந்த ரூ.500 ரொக்கம் மற்றும் கைக்கடிகாரத்தை பறித்துவிட்டு தப்பிச் சென்றாராம்.

இது தொடா்பான புகாரின்பேரில், ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனா். இவா் மீது ராமநத்தம், மங்களமேடு, சின்னசேலம், செந்துறை ஆகிய காவல் நிலையங்களில் 6 வழிப்பறி வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரை செய்தாா். அதன்பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஓராண்டு காலம் குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com