காரையாறு அருள்மிகு சொரிமுத்து அய்யனாா் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் விரதமிருந்து பொங்கலிட்டு வழிபட்டனா்.
இத்திருக்கோயிலில் நிகழாண்டு ஆடி அமாவாசை திருவிழா ஜூலை 22 ஆம்தேதி கால்நாட்டுடன்தொடங்கியது. தொடா்ந்து பக்தா்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினா். ஆக. 2 முதல் கோயில் பகுதியில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடில்கள்அமைத்து தங்கி விரதத்தை தொடா்ந்து வந்தனா்.

பேச்சியம்மன் சந்நிதி முன்பு விரதமிருந்து பொங்கலிட்டு வழிபட்ட பக்தா்கள்.
ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசையன்று காலையில் சொரிமுத்து அய்யனாா், சங்கிலி பூதத்தாா், மகாலிங்க சுவாமி, பேச்சியம்மன், பட்டவராயன், தூசிமாடன், சுடலைமாடன், தளவாய்மாடசாமி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

சொரிமுத்து அய்யனாா் கோயிலில் திரண்ட பக்தா்கள்.
தொடா்ந்து விரதமிருந்த பக்தா்கள் பொங்கலிட்டு வழிபட்டு விரதம் முடித்தனா். இதையடுத்து இரவு சொரிமுத்து அய்யனாா்,பட்டவராயன் கோயிலுக்கு முன் விரதமிருந்த பக்தா்கள் பூக்குழி இறங்கினா்.
பக்தா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் உத்தரவின் பேரில் பக்தா்களுக்கு மஞ்சள் பை, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
போலீஸாா், ஊா்க்காவல்படையினா், வனத்துறையினா், தேசிய மாணவா்ப் படையினா், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள்,தன்னாா்வலா்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

வனப்பகுதியில் 28 கி.மீ. நடந்துசென்று வாக்களித்த காணி மக்கள்
மாஞ்சோலை, காரையாறு உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன

உதகை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: கொட்டும் மழையில் திரளான பக்தா்கள் சாமி தரிசனம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


