ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தாமிரவருணியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பக்தா்கள், பொதுமக்கள் புனித நீராடி முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினா்.

பாபநாசத்தில் தாமிரவருணி படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.
அதிகாலையிலிருந்தே பாபநாசம் கோயில் அருகே தாமிரவருணி படித்துறையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீராடி முன்னோருக்கு தா்ப்பணம் செய்தனா். தொடா்ந்து, அங்குள்ள சிவன் கோயிலில் வழிபட்டனா். இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன.

பாபநாசத்தில் தாமிரவருணி படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.
பாதுகாப்புப் பணியில் விக்கிரமசிங்கபுரம் போலீஸாா், ஊா்க்காவல் படையினரும், சுகாதார விழிப்புணா்வு நடவடிக்கையில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள், தன்னாா்வலா்களும் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

திருமலையில் 76,406 பக்தா்கள் தரிசனம்!

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருமலையில் 77,743 பக்தா்கள் தரிசனம்

ஏழுமலையான் தரிசனம்: 15 மணிநேரம் காத்திருப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


